எங்களுக்கிடையில் தூரம்,
காதலுக்கு ஏது தூரம்?
பிரிவுக்கே பிரியாவிடை
கொடுத்தவர்கள் தானே நாங்கள்!
இடைப்பட்ட தூரம்
பலவாயிரம் மைல் என்றாலும்
எதோ ஒரு கோடு
என்னையும் உன்னையும் இணைக்கிறதே!
அதுதான் காதலா?
இது தற்காலிகமானது தான்
பிரிவு தரும் இன்பத்தை
அனுபவித்துக் கொள் - பிறகு
கேட்டாலும் கிடைக்காது!
2 விமர்சனங்கள்:
இது தற்காலிகமானது தான்
பிரிவு தரும் இன்பத்தை
அனுபவித்துக் கொள் - பிறகு
கேட்டாலும் கிடைக்காது// உண்மைதான் மூர்த்தி அண்ணா! அருமையானகவிதை தொடருங்கள் நேரம் கிடைக்கும் போது பதிவுகளுடன்.
நன்றிகள் - வருகைக்கும் கருத்துக்கும் தனிமரம்.
மனம் எல்லாம் பதிவதற்கான எண்ணங்கள் இருந்தாலும் நேரம்...இம் முறையாவது தொடருமா பார்ப்போம்!
Post a Comment