இலங்கையில் இருந்து உற்பதியாகி தமிழ் வாடிக்ககையாளர்களுககாக புலம் பெயர் நாடுகளுக்கு அனுப்பப்படும் ஏற்றுமதிப் பொருட்களை புறக்கணிக்கும் படி அண்மையில் பல பேர் வெவ்வேறு வளிகளிலும் வேண்டியும் அறிக்கை விட்டும் இருந்தனர், ஆனால் நுகர்வேரோ வியாபாரத்ஸ்தலங்களோ கண்டுகொண்டதாய் தெரியவில்லை.
சில நாட்களுக்கு முன்னர் எனக்குத் தெரிந்த தமிழ் கடை ஒன்றில் இலங்கைப் பழச்சாறு, உலர் உணவுகள், கடல் உணவுகள் குவிக்கப் பட்டு இருந்ததைப் பார்த்து விட்டு கடை முகாமையாளரிடமே இது பற்றிக் கேட்டேன். “சில சாமான் விக்காட்டி அண்ணன் கடையையே இழுத்து மூட வேண்டியது தான். சனம் வேற கடை பார்த்து விடும்” என்ற பதில் வந்தது. அதே நேரம் அங்கு வந்த ஒரு அக்கா நெக்டோவை ( இலங்கை யானை மார்க் குளிர் பானம்) காணாததால் கவலையுற்று நெக்டோ முடிந்துவிட்டதா? Stock இல் இல்லையா என்றும் தனது (லண்டனில் பிறந்து வளர்ந்த) மகன் வேறு ஏதும் குடிக்கமாட்டார் என்றும் கலாய்த்துக் கொண்டிருந்தா.
இன்னும் ஒரு கடை முதலாளி என்னடா என்றால் “அவங்களுக்கு ( இலங்கை) உதவி வளங்கும் நாடுகள் மில்லியன் பில்லியன் என்று கொட்டிக் கொடுக்குது. அதுகளுக்கு முன்னால் ஏற்றுமதிப் பொருட்களால் போகும் அன்னிய செலவாணி ஒன்றும் பெரியதிலை” என்று ரெக்னிக்கலாய் பதில் கூறினார். அவருக்கு சிறுதுளி பெருவெள்ளம் என்று தெரிவித்து விட்டு வந்தேன். இவரது கடையிலும் தகரத்தில் அடைத்த மீன் மற்றும் TVP சோயா வகைகள் நிறைய அடுக்கப்பட்டிருந்தன.
எனது நண்பர் ஒருவரும் இலங்கை சாமான்களை புறக்கணிப்போம் என்று சொல்லி விட்டு அவற்றிக்கு மாற்றீடாக இந்தியாவில் இருந்து வரும் பொருட்களை தானே பாவிக்க வேண்டி வரும் என்றும் இந்தியா எங்களுடைய பிரச்சினையை கையாண்ட விதம் பிழை என்றும் வாதாடினார்.
இவற்றிக்கு எனக்கு பதில் தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒன்று மட்டும் தெரியும். இலங்கைப் பொருட்களையும் – அவை நேரடி இறக்குமதியோ அல்லது வெளிநாடுகளில் பைகளில் அடைக்கப்பட்டவையோ – சேவைகளையும் ( முக்கியமாக விமானப் போக்குவரத்து) முற்று முழுதாக அனைத்து புலம்பெயர் தமிழ்ர்களும் அவர்களை சார்ந்தவர்களும் புறக்கணிக்கும் பச்சத்தில் உடனடியாக இலாவிட்டாலும் இன்னும் 5 -10 வருடங்களில் இலங்கைக்கு கிடைக்கும் அன்னிய செலவாணியின் அளவில் பெரிய மாற்றம் வரும், தமிழர்களை அளித்து வெடி கொளுத்தி கொண்டாடியவர்கள் அத்ற்காக வருந்த வேண்டிய காலம் நேரும் எனபது திண்ணம்.
இனி வரும் பதிவுகளில் எவ்வளவு அனனிய செலவாணியை இலங்கை பெறுகிறது எனபது பற்றியும் மாற்றீட்டு போருட்கள் மற்றும் என்ன மாதிரி நண்பர்களுக்கு விழிப்பு உணர்வு ஊட்டுவது பற்றியும் பார்ப்போம்.
தாழ்மையான வேண்டுகோள்: புறக்கணிப்போம் இலங்கை ஏற்றுமதிப் பொருட்களை! – பாகம் 1
குரும்பையூர் மூர்த்தி | Sunday, July 26, 2009 | குறிச்சொற்கள் ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)
1 விமர்சனங்கள்:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Post a Comment