கந்தையா அண்ணை கனகாலமாக ஒவ்வொரு வெள்ளி இரவும் மதுபான சாலைக்கு (Pub) வருவார். அவர் தனிய வாறது மட்டுமில்லாமல் மூன்று பைந் பியர் (pint of beer) வேண்டி மாறி மாறி ஒவ்வொரு கிளாசிலில் இருந்தும் அவரே குடிப்பது எல்லாருக்கும் வேடிக்கையாக இருக்கும்.
இப்பிடி வினேதமான பழக்கத்தை பார்த்த அக் கடையின் உதவியாளர் தனது ஆச்சரியத்தை கட்டுப்படுத்த முடியாமல் கந்தையா அண்ணையிடம் கேட்டார். அதுக்கு அவர் சொன்ன பதில் ` எனக்கு இரண்டு உயிர் நண்பர்கள் இருந்தனர். ஊரை விட்டு வேறு நாடுகளுக்கு போகும் போது நாங்கள் எடுத்த முடிவு இது. எந்த நாட்டில் இருந்தாலும் நாங்கள் சேந்து இருப்பது போல் கிழமையுயில் ஒரு நாள் இப்படி குடிப்பதாக ஒரு சத்தியம் செய்திருக்கிறேன். அவையும் அப்பிடியே செய்வினம்` உதவியாளர் இப்படி வித்தியாசமான ஒரு ஆள் இந்த உலகத்திலே இருக்கிறார்களா என்று வியந்தபடி போனார்.
கனகாலமாக இது தொடர்ந்த்து.
சில வருடங்களின் பின்னர் ஒரு நாள் கந்தையா அண்ணை மூன்றுக்கு பதிலாக இரண்டு பியர் மட்டுமே வாங்கி மாறி மாறி குடித்தார். அதை கண்ட கடை உதவியாளர் கண் எல்லாம் கலங்க கந்தையா அண்ணைக்கு கிட்ட போய் கேட்டார். உங்கள் இரு நண்பர்களில் ஒராளுக்கு எதாவது நடந்துவிட்டதா? என்று கேட்டார்.
கந்தையா அண்ணையின் பதில் சொன்னார் `அடடா அப்பிடி நினைத்துவிட்டீங்களா? அவங்கள் எல்லாம் சுகமாய்த்தான் இருக்கிறாங்கள் நான் தான் டொக்ரர் சொன்னார் என்று குடிப்பதை நிறுத்தி விட்டேன்.`
தடால்.......!
2 விமர்சனங்கள்:
நல்ல பதிவு...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இன்றைய வானம்
Post a Comment