புகைப்படத் தொழிலின் அடுத்த கட்டம் சினிமாகிராப் (Cinemagraphas) என்று அழைக்கப்படும் அசையும் புகைப்படங்களாகும். புகைப்படங்களின் சில பகுதிக்கு மட்டும் உயிர் கொடுத்து படங்களின் நிஜத்தன்மையை இன்னும் கூட்ட இந்த தொழில் நுட்பம் உதவுகிறது. 

நியூ யோர்க்கின் இரண்டு புகைப்படத்துறைத் தலைகள் சேர்ந்து உலகத்திற்கு கொடுத்தது இந்த தொழில் நுட்ப்பம். ஒரே படமாக (வீடியோ அல்ல) இருப்பதால் வலைத் தள பாவனைக்கு உகந்ததாக இருப்பதோடு இதன் அசையும் சிறிய பகுதிகள் முலம் புகைப்படத்தை இலகுவாக மனதில் பதிய வைக்க இயலும்.

புகைப்படத்தை முதலில் எடுத்து அதே நேரம் படத்தில் அசைவதாக காட்டப்படும் பகுதிகளை மட்டும் அசைத்து வீடியோவும் எடுத்து பின்னர் போட்டோ சொப் மூலம் இணைத்தே இப்படங்கள் உருவாக்கப் படுகின்றன. மிகவும் நுட்பமான புகைப்பட கருவிகளால் இந்த படங்கள் எடுக்கப்பட வேண்டும். 

இத் தொழில் நுட்பம் இந்தியாவுக்கு வந்தால் விரைவில் சினிமா போஸ்ரரிலேயே ரஜனியின் மானாரிசங்களை காணாலாம்.

கீழே சில படங்கள் உங்கள் பார்வைக்கு. நிழல் மற்றும் கண்ணாடி விம்பங்களில் கூட அசைவை உற்று நேக்குங்கள்.  சில படங்கள் பல நாட்கள் எடுக்கிறதாம் செய்து முடிக்க!









எங்களுக்கிடையில் தூரம்,
காதலுக்கு ஏது தூரம்?
பிரிவுக்கே பிரியாவிடை
கொடுத்தவர்கள் தானே நாங்கள்!

இடைப்பட்ட தூரம்
பலவாயிரம் மைல் என்றாலும்
எதோ ஒரு கோடு
என்னையும் உன்னையும் இணைக்கிறதே!
அதுதான் காதலா?

இது தற்காலிகமானது தான்
பிரிவு தரும் இன்பத்தை
அனுபவித்துக் கொள் - பிறகு
கேட்டாலும் கிடைக்காது!


கந்தையா அண்ணை கனகாலமாக ஒவ்வொரு வெள்ளி இரவும் மதுபான சாலைக்கு (Pub) வருவார். அவர் தனிய வாறது மட்டுமில்லாமல் மூன்று பைந் பியர் (pint of beer) வேண்டி  மாறி மாறி ஒவ்வொரு கிளாசிலில் இருந்தும் அவரே குடிப்பது எல்லாருக்கும் வேடிக்கையாக இருக்கும்.

இப்பிடி வினேதமான பழக்கத்தை பார்த்த அக் கடையின் உதவியாளர் தனது ஆச்சரியத்தை கட்டுப்படுத்த முடியாமல் கந்தையா அண்ணையிடம் கேட்டார். அதுக்கு அவர் சொன்ன பதில் ` எனக்கு  இரண்டு உயிர் நண்பர்கள் இருந்தனர். ஊரை விட்டு வேறு நாடுகளுக்கு போகும் போது நாங்கள் எடுத்த முடிவு இது. எந்த நாட்டில் இருந்தாலும் நாங்கள் சேந்து இருப்பது போல் கிழமையுயில் ஒரு நாள் இப்படி குடிப்பதாக ஒரு சத்தியம் செய்திருக்கிறேன். அவையும் அப்பிடியே செய்வினம்`  உதவியாளர் இப்படி வித்தியாசமான ஒரு ஆள் இந்த உலகத்திலே இருக்கிறார்களா என்று வியந்தபடி போனார்.

கனகாலமாக இது தொடர்ந்த்து.

சில வருடங்களின் பின்னர் ஒரு நாள் கந்தையா அண்ணை மூன்றுக்கு பதிலாக இரண்டு பியர் மட்டுமே வாங்கி மாறி மாறி குடித்தார். அதை கண்ட கடை உதவியாளர் கண் எல்லாம் கலங்க கந்தையா அண்ணைக்கு கிட்ட போய் கேட்டார். உங்கள் இரு நண்பர்களில் ஒராளுக்கு எதாவது நடந்துவிட்டதா? என்று கேட்டார்.

கந்தையா அண்ணையின் பதில் சொன்னார் `அடடா அப்பிடி நினைத்துவிட்டீங்களா? அவங்கள் எல்லாம் சுகமாய்த்தான் இருக்கிறாங்கள் நான் தான் டொக்ரர் சொன்னார் என்று குடிப்பதை நிறுத்தி விட்டேன்.`

தடால்.......!