Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts
தலைவர் இருக்கிறாரா
இல்லையா?
ஒருநாள் வருவாரா
இல்லையா?
தமிழ் ஈழம்
சாத்தியமா இல்லையா?
போராட்டம் அழிய
என்னகாரணம்?
ஆராச்சி செய்பவர்களே!
எங்களுக்கு இதைவிட
மிகவும் முக்கியமான
பணி உள்ளது
உறவுகளே!
புலத்தில் வாழும்
எமது
அடுத்த தலைமுறையை
பாருங்கள்
அவர்கள் கதைக்கும்
மொழிகள் எத்தனை?
அவர்கள் பழகும்
நட்புக்கள் எத்தனை நாட்டவர்?
அவர்கள் படித்த
பாடங்கள் எத்தனை?
அவர்கள் இல்லாத
துறைகள் எது?
ஆயுதங்களை விடவும்
பலமான
ஆயிரம் வழிகள் உண்டு
இளைய தலைமுறைக்கு
நாட்டை மீட்கும் பொறுப்பும் உண்டு
ஊடகத்துறை
பற்றி நன்கு அறிந்தோற்கு
உணவு மட்டும்
ஊட்டாமல் - விடுதலை
உணர்ச்சியையும் ஊட்டுவோம்
பலதைப் பற்றியும்
வாதிடுவோர்க்கு
சுதந்திரம்
பற்றியும் போதிப்போம்
அவர்களின் அப்பு
ஆச்சியும்
பாட்டனும் பூட்டனும்
பூட்டனின் பூட்டனும்
கமம் செய்து
வாழ்ந்த மண்
அவர்கள் பரம்பரை
ஆண்ட மண்
அண்ணன் அக்காக்கள்
பலர்
உயிர் கொடுத்து
காத்தமண் - அது
அவர்களின் உருத்து மண் என்றும்
அங்கு வாழும்
உறவுகள்
அவர்களின் வேர்கள்
என்றும்
அங்கிருக்கும் அடர்ந்த
மரங்கள்
அவர்களின் பாட்டன்
பாட்டி
கை பட்டவை
என்றும்
தெரியப்படுத்துங்கள்
புரியப்படுத்துங்கள்
அன்பான உறவுகளே!
தமிழர் தாயகம்
அது என்றும்
எதிரி ஆக்கிரமித்த பகுதி எது என்றும்
எங்கள் வரலாறு தொன்மையானதென்றும்
எங்கள் பண்பாடு பெருமையானதென்றும்
நீங்கள் தேடி அறிந்துகொள்ளுங்கள்
பின்னர்
பின்வந்தோர்க்கு கற்றுக்கொடுங்கள்
படங்களும் உண்மையில்லை – நெடுமையான
நாடகங்களும் உண்மையில்லை
நாங்கள் நாடு இழந்தது நிதர்சனம்
- அதை
வீட்டு பாடமாய் புகட்டி வாருங்கள்
நேரமில்லை நட்புக்களே!
தமிழன் தாயகத்தில் பிறக்கும்
ஆக்கிரமிப்பாளன் பிள்ளை நாளை
தானே இன் நிலத்தின் மகன் என்பான்
புலத்தில வாழும்
உங்கள் பிள்ளையை எவன் என்பான்!
நாளைய சந்ததிக்கு
உணர்வை ஊட்டுங்கள்
உணர்வை ஊட்டுங்கள்
தர்மம் எதுவென்று
தாராளமாய் போதியுங்கள்
தாராளமாய் போதியுங்கள்
அவர்களில் இருந்து
வருவான்
நாளைய தலைவன் –
ஒருவரல்ல
ஒராயிரமாய்.
ஒவ்வொருவரில்
இருந்தும்
ஒராயிரமாய்
வருவான்
தலைவன்
என் தந்தை த க செல்லையா
குரும்பையூர் மூர்த்தி | Friday, October 12, 2012 | குறிச்சொற்கள் கவிதைகள், குரும்பசிட்டி
ஆசிரியர்
கலாசாலையிலே தான் பயின்று – பல
ஆசான்களை
உருவாக்கியவர் எம் தந்தை.
தாய்மொழியாம்
தமிழதனை பலபேர்க்கு
தடையின்றி கற்பித்த கல்விக்கடல்.
நிமிர்த்து
அவர் நடை, நேரியது அவர் பார்வை
சரியானதை
சரியென்று வாதிடும் அவரது நா.
குறுகியது அவர் தோற்றம், மகா மேரு
மலையிலும் பெரியது அவரது மனம்.
வையத்துள்
வாழ்வாங்கு வாழவேடுமென
மற்றோற்கு
உதாரணமாய் வாழ்ந்தவர் அவர்
மேன்மக்கள்
படங்கள் தனை தேடித்தேடி
வீட்டுக்கூடத்தில்
அலங்கரித்தவர் அவர்
அவர்
சித்திரம் தீட்டிய வெற்றுத்தாள் கதை சொல்லிற்று
அவர் அணிந்ததனால்
வெள்ளைவேட்டி கர்வப்பட்டது
அவர் பாடம் கேட்டவர் அறிஞர்கள் ஆனார்கள்
அவர் சொற்கேட்டோர் உத்தமர் ஆகினர்
அவர்
எங்களுக்கு புகட்டிய இதிகாசங்களுக்கு அளவில்லை
அவர் காட்டிய
பாசம் இலக்கியத்தில் இடம்பெறவில்லை
அவர்
வேண்டிவைக்காத நல்ல தமிழ் புத்தகம் இல்லை
அவரை கொண்டாடத
குரும்பசிட்டி உறவுகளும் இல்லை
எமக்கு தந்தை, என் தாய்க்குப் பதி
அவர்
தம்பிதங்கைக்கு நல் அண்ணன்
ஊரோர்ருக்கு ஆசிரியர்
த க செல்லையா
எனும் நாமங்கொண்ட
ஒர் நல்ல
மனிதர்.
சுட்டும் விளி அழகை
அதிகாலை சூரிய உதயத்தை
பால்வீதியின் வடிவத்தை
ஓளித்து வைக்கும் அழகே!
அழகான வண்ணத் தோகை மயிலின்
முழு உருவத்தையும்
உன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும்
தாற்பரியத்தை எங்கே கற்றாய்?
எனனைப் பார்த்து புன்னகைத்தது போதும்
உயிர் கொண்டு ஏழுந்து வா....!
(படம் : மருமகன் புருக்ஷோத்)

அதிகாலை சூரிய உதயத்தை
பால்வீதியின் வடிவத்தை
ஓளித்து வைக்கும் அழகே!
அழகான வண்ணத் தோகை மயிலின்
முழு உருவத்தையும்
உன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும்
தாற்பரியத்தை எங்கே கற்றாய்?
எனனைப் பார்த்து புன்னகைத்தது போதும்
உயிர் கொண்டு ஏழுந்து வா....!
(படம் : மருமகன் புருக்ஷோத்)
படர இடம் தேடியது
முல்லைச் செடி - அதனை
வாள் கொண்டு வெட்டி
மாட்டுக்கு உணவாக்கினர்
குளிரில் நடுங்கியது
தேகைமயில் - அதன்
இறகுகளை பிடுங்கி
சந்தைக்கு அனுப்பினர்.
ஆராட்சி மணி தேடியது
அறிவுள்ள மாடு - அதை
கொடுமையாக கொன்று
உணவாகிப் புசித்தனர்.
சிலம்போடு வந்தாள்
கண்ணகி - அவளை
அலங்கோலப் படுத்தி
சிறையினில் அடைத்தனர்.
ஆனால்
சகுனிக்கு அமைதிப் பரிசு!
கூனிக்கு ஓஸ்கார் விருது!
முல்லைச் செடி - அதனை
வாள் கொண்டு வெட்டி
மாட்டுக்கு உணவாக்கினர்
குளிரில் நடுங்கியது
தேகைமயில் - அதன்
இறகுகளை பிடுங்கி
சந்தைக்கு அனுப்பினர்.

ஆராட்சி மணி தேடியது
அறிவுள்ள மாடு - அதை
கொடுமையாக கொன்று
உணவாகிப் புசித்தனர்.
சிலம்போடு வந்தாள்
கண்ணகி - அவளை
அலங்கோலப் படுத்தி
சிறையினில் அடைத்தனர்.
ஆனால்
சகுனிக்கு அமைதிப் பரிசு!
கூனிக்கு ஓஸ்கார் விருது!
கொண்ட கொள்கை காப்பாற்ற
காடு சென்றான் ராமன்
காடு சென்றான் ராமன்
கொண்டவனுக்கு சேவை சேய்ய

கூடவே சென்றாள் அவன் துணைவி
அண்ணனுக்கும் அவன் துணைவிக்கும்
பாசமாக பணிவிடை புரியவென
பலகாலம் வனத்தில் வாழ்ந்தான்
பலத்திற்கு இலக்கணமான இலக்குமணன்
ஈரேழு வருடங்கள் ஊரிலேயே தங்கி
மாமிமாருக்கு சேவகம் செய்து
தன்நிலை கெடாமல் தனியே வாழ்ந்தாள்
இலக்குவன் துணைவி ஊர்மிளா.
கட்டிய கணவனை மனத்திலே வரிந்து
விட்டுக்கொடுபிற்கு இலகணமாய் இருந்து
இளமையான வயதினிலே வாழாது நொந்து
தியாகத்திற்கு உதாரணமாக தன்னையே தந்து
சரித்திரமானாள் ஊர்மிளா.
ஒன்று இரண்டல்ல வருடங்கள் பதினாலு
இன்று யாரும் செய்வார்களா இது போலே?
பாவம் ஊர்மிளா....!
அண்ணனுக்கும் அவன் துணைவிக்கும்
பாசமாக பணிவிடை புரியவென
பலகாலம் வனத்தில் வாழ்ந்தான்
பலத்திற்கு இலக்கணமான இலக்குமணன்
ஈரேழு வருடங்கள் ஊரிலேயே தங்கி
மாமிமாருக்கு சேவகம் செய்து
தன்நிலை கெடாமல் தனியே வாழ்ந்தாள்
இலக்குவன் துணைவி ஊர்மிளா.
கட்டிய கணவனை மனத்திலே வரிந்து
விட்டுக்கொடுபிற்கு இலகணமாய் இருந்து
இளமையான வயதினிலே வாழாது நொந்து
தியாகத்திற்கு உதாரணமாக தன்னையே தந்து
சரித்திரமானாள் ஊர்மிளா.
ஒன்று இரண்டல்ல வருடங்கள் பதினாலு
இன்று யாரும் செய்வார்களா இது போலே?
பாவம் ஊர்மிளா....!
சில மழலைகளே
தமிழ் கதைக்க - அதை
மறந்தவர் பலர் இருக்க
தாய்மொழி கொஞ்சமாய்-
பிறமொழி கொஞ்சமாய்
எங்கள் தேச கலாச்சாரத்துடன்
நடப்பவர் சிலர்-
அன்னிய கலாச்சாரம் சிறந்தது
என்பவர் சிலர்
இரண்டுக்கும் இடையில்
இரண்டும் புரியாமல்
திகைப்பவர் பலர்
ஏங்கள் ”சிறிசு” களின் எதிர்காலம்
கேள்விக்குறி தான்.
வயது வந்தவர்களே “குளம்பிப்” போயிருக்க
காதிலே தோடும் சிறிய குடுமியுமாய்
டிஸ்காவில் ஆட
“நேற்றுப் பிறந்ததுகள்” பாவம்
என்ன செய்யும்?
தந்தை வேலைக்கு
தாய் சீரியல் பார்க்க
சேர்ந்து விளையாட
ஆள் இல்லை
புரியாமல் திகைக்கும்
மழலைகள் எத்தனை?
Power ranger உம்
spider man உம்
மட்டுமே பார்த்துப் பார்த்து
monster ஆகிவிடும்
குஞ்சுகள் எததனை?
எங்களுக்கும் நேரமில்லை
வேலையும் சாப்பாடும்
மிஞ்சுகின்ற நேரம்
மூன்று மணி நேர தமிழ்ப் படம்
ஒரு நாள் நேரம் வரும்
பிள்ளைகளுக்கு தமிழ் படிப்பிற்க
நிலாச்சோறு பாசத்துடன் ஊட்ட
கலாச்சாரம் எதுவென்று உணர்த்த
எல்லாவற்றிகும் காலம் வரும்
(புகுந்த மண் என்கின்ற தலைப்பில் லண்டன் sanrise வானொலிக்காய் 1997 பங்குனி எழுதியது)
தமிழ் கதைக்க - அதை
மறந்தவர் பலர் இருக்க
தாய்மொழி கொஞ்சமாய்-
பிறமொழி கொஞ்சமாய்
எங்கள் தேச கலாச்சாரத்துடன்
நடப்பவர் சிலர்-
அன்னிய கலாச்சாரம் சிறந்தது
என்பவர் சிலர்
இரண்டுக்கும் இடையில்
இரண்டும் புரியாமல்
திகைப்பவர் பலர்
ஏங்கள் ”சிறிசு” களின் எதிர்காலம்
கேள்விக்குறி தான்.
வயது வந்தவர்களே “குளம்பிப்” போயிருக்க
காதிலே தோடும் சிறிய குடுமியுமாய்
டிஸ்காவில் ஆட
“நேற்றுப் பிறந்ததுகள்” பாவம்
என்ன செய்யும்?
தந்தை வேலைக்கு
தாய் சீரியல் பார்க்க
சேர்ந்து விளையாட
ஆள் இல்லை
புரியாமல் திகைக்கும்
மழலைகள் எத்தனை?
Power ranger உம்
spider man உம்
மட்டுமே பார்த்துப் பார்த்து
monster ஆகிவிடும்
குஞ்சுகள் எததனை?
எங்களுக்கும் நேரமில்லை
வேலையும் சாப்பாடும்
மிஞ்சுகின்ற நேரம்
மூன்று மணி நேர தமிழ்ப் படம்
ஒரு நாள் நேரம் வரும்
பிள்ளைகளுக்கு தமிழ் படிப்பிற்க
நிலாச்சோறு பாசத்துடன் ஊட்ட
கலாச்சாரம் எதுவென்று உணர்த்த
எல்லாவற்றிகும் காலம் வரும்
(புகுந்த மண் என்கின்ற தலைப்பில் லண்டன் sanrise வானொலிக்காய் 1997 பங்குனி எழுதியது)
பூ உலகத்தில்
ஒரே ஒரு பட்டாம்பூச்சி...
அது நீ தான்
என் காதலி!
**
சூரியன் ஒளி தந்தான்
நிலவு குளிர் தந்தது
மல்லிகை வாசம் தந்தது
காதலி நீ தான்
உன்னையே தந்தாய்!
**
இருள் வெளிச்சத்தை உணர்த்தியது
கூதல் வெம்மையை உணர்த்தியது
பொய் உண்மையை உணர்த்தியது
காதலி நீ தான்
என்னை உணத்தினாய்!
**
அணுக்குண்டோ
உன் விளித்திரைகள்?
என்னை மட்டுமல்ல
பலபேரை
உயிர்விட வைக்கின்றனவே!
**
பார்த்தாய் பார்த்தேன்
சிரித்தாய் சிரித்தேன்
தலையை திருப்பினாய்
உயிரிழந்தேன்!
(படங்கள் இணையத்தில் சுட்டவைதான்)
ஒரே ஒரு பட்டாம்பூச்சி...
அது நீ தான்
என் காதலி!

**
சூரியன் ஒளி தந்தான்
நிலவு குளிர் தந்தது
மல்லிகை வாசம் தந்தது
காதலி நீ தான்
உன்னையே தந்தாய்!
**
இருள் வெளிச்சத்தை உணர்த்தியது
கூதல் வெம்மையை உணர்த்தியது
பொய் உண்மையை உணர்த்தியது
காதலி நீ தான்

என்னை உணத்தினாய்!
**
அணுக்குண்டோ
உன் விளித்திரைகள்?
என்னை மட்டுமல்ல
பலபேரை
உயிர்விட வைக்கின்றனவே!
**
பார்த்தாய் பார்த்தேன்
சிரித்தாய் சிரித்தேன்
தலையை திருப்பினாய்
உயிரிழந்தேன்!
(படங்கள் இணையத்தில் சுட்டவைதான்)
சூரியனைத் துப்பாக்கி துளைப்பதிலை....
குரும்பையூர் மூர்த்தி | Saturday, July 18, 2009 | குறிச்சொற்கள் ஈழம், கவிதைகள், மேத்தா
கவிஞர் மு.மேத்தாவை எனக்குப் பிடிக்கும். அவரின் எழுத்துக்கள் ஆணித்தரமானவை. இவரது ஒவ்வொரு கவிதையும் பிரசவங்கள். மனதை வருடும் புகைப்படங்கள். புதுக்கவிதகள் எழுத நான் முயற்சி செய்யும் போது எங்கே வசனத்தை முடிப்பது, சரியான குறியீடுகள் எப்படி பாவிப்பது போன்ற விடையங்களை பழக ஆதாரமாக இருந்தது இவர் கவிதைகள்.
மேத்தாவின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த இந்தக்கவிதையை முழுவதுமாய் இங்கு தருகிறேன். சூரியனைத் துப்பாக்கி துளைப்பதிலை.... என்ற இக்கவிதை 1988 ஆம் ஆண்டு எழுதப் பட்டது. நான் முதல் முதலாய் வாசித்தது 1990ல். அன்று முதல் என் மனதில் நீங்காமல் இடம் பெற்ற இக்கவிதையை நான் இப்போது பார்த்து எழுதியது ”அவளுக்கு ஒரு கடிதம்” என்ற நூலில் இருந்து.
21 வருடங்களின் பின்னரும் இக்கவிதை சரித்திரமாய் இருக்கிறது,
மேத்தாவின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த இந்தக்கவிதையை முழுவதுமாய் இங்கு தருகிறேன். சூரியனைத் துப்பாக்கி துளைப்பதிலை.... என்ற இக்கவிதை 1988 ஆம் ஆண்டு எழுதப் பட்டது. நான் முதல் முதலாய் வாசித்தது 1990ல். அன்று முதல் என் மனதில் நீங்காமல் இடம் பெற்ற இக்கவிதையை நான் இப்போது பார்த்து எழுதியது ”அவளுக்கு ஒரு கடிதம்” என்ற நூலில் இருந்து.
21 வருடங்களின் பின்னரும் இக்கவிதை சரித்திரமாய் இருக்கிறது,
|
உனக்காக இதோ ...இதோ ஒரு எழுச்சிப் பயணம்! சென்னையிலிருந்து கன்னியா குமரி! செல்கிறோம் எங்கள் இதயங்கள் குமுறி! நீ எங்கிருக்கிறாய் என்பது எங்களுக்குத் தெரியாது ஆனால்- என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதை உலகம் முழுவதும் உணர்ந்திருக்கிறது! அவர்கள்- எங்கே இருக்கிறார்கள் என்பது தெரிகிறது ஆனால்- என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் அவர்களும் கூட அறிந்து கொள்ளவில்லை! நீ தேசத்தை பிரசவிப்பதற்காக அன்றாடம் உன்னையே ஆயுத சிகிச்சைக்கு ஆளாக்கிக் கொள்கிறாய்! அவர்களோ- ஒரு குழந்தையை கொல்வதற்காகத் தாயின் வயிற்றையே பீரங்கி கொண்டு பிளக்கப் பார்க்கிறார்கள்! நீ- விடுதலையை தேடுகிறாய்; உன் மக்களுக்கான விடியலைத் தேடுகிறாய்! அவர்கள் உன்னையே தேடுகிறார்கள்! துப்பாக்கி முனைகளுகுச் சொல்லி வைக்கிறோம்- சூரியக் கதிர்களை துளைக்க முடியாது! எமதர்மக் கைகளை எச்சரிக்கிறோம்- வெண்ணிலவை வலை வீசி வீழ்த்தியவர் கிடையாது! ஒருவனைப் பிடிக்க ஒரு லட்சம் படையா? உண்ண மறுத்தால் அதற்கும் தடையா? உலக சரித்திரம் படித்ததே இல்லையா? |
இனிமேல்- காந்தி சிலைகளில் உள்ள கைத்தடியை அகற்றுங்கள்! அதற்கு பதிலாகத் துப்பாக்கி ஒன்றை அதன் தோள்மீது மாட்டுங்கள்! இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவுக்குத்தான்! ஆமாம்... அமைதி என்பதற்கான புதிய அர்த்ததைப் பூமிக்கு தந்ததனால்! அன்றொரு நாள்- பிரபாகரன் எனபது பெயராக இருந்தது. இப்போது- பிரபாகரன் என்பது பிரமிப்பாய் ஆனது! இனிமேல் பிரபாகரன் எனபது பிரளயமாய் ஆகாதோ? எங்கள் இலட்சியக் கனவுகளின் சுமைதாங்கியே! பொன்னாடை தோள்மீது போர்த்துவதாய்ச் சொல்லி உன்மீது சிலுவை அறைந்தது யார்? நீ ஏசுவல்ல- ஆனால் இறப்பினும் நீ உயிர்த்தெழுவாய்! ஒரு பிரபாகரனாய் அல்ல... ஒரு லட்சம் பிரபாகரனாய்! உன்னுடைய மூச்சுக் காற்று முகாமிட்ட இடமெல்லாம் பட்டாளம் தனைச்சாய்க்கும் பாசறைகள் உண்டாகும்! உன்னுடைய பாதங்கள் நடந்த பாதைகளிலெல்லாம் புல்லும் கூட புலியாக மாறும்! உன்னுடைய சுட்டும் விழிச்சுடர் தொட்ட இடமெல்லாம் ஜோதி கருவாகும்! புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் அங்கே உருவாகும்! |
(இக் கவிதை யாழ்க்குடா நாடு சிங்கள வெறியர்களால் கைப்பற்றப்பட்டு அடுத்தநாள் தமிழ் வானொலிக்காய் எழுதப்பட்டது.)
விடுதலையாம்!
எம் மண்ணுக்கு-
செய்திகள் உளறின நேற்று

எங்கள் மண்ணுக்கு மட்டுமல்ல
எங்கள் கலாச்சாரத்திற்கும்
காலம்காலமாய் போற்றிய புனிதத்திற்கும்
எங்கள் மாவீரர் கனவுகளுக்கும்
எங்கள் மக்களின் உயிர்களுக்கும்
எங்கள் பெண்களின் கற்புகளுக்கும்
விடுதலையாம்-
மீட்டுவிட்டார்களாம் -
உளறின செய்திகள் நேற்று
நாய்கள் குரைத்தன
நரிகள் ஊளையிட்டன
வல்லூறுகளும்
ஆந்தைகளும்
சென்று குடியேற -
தயாராய் இப்போ இருக்கிறது
”மீட்டெடுத்த மண்”
விடுதலையாம்!
எம் மண்ணுக்கு-
செய்திகள் உளறின நேற்று
விடுதலையாம்!
எம் மண்ணுக்கு-
செய்திகள் உளறின நேற்று

எங்கள் மண்ணுக்கு மட்டுமல்ல
எங்கள் கலாச்சாரத்திற்கும்
காலம்காலமாய் போற்றிய புனிதத்திற்கும்
எங்கள் மாவீரர் கனவுகளுக்கும்
எங்கள் மக்களின் உயிர்களுக்கும்
எங்கள் பெண்களின் கற்புகளுக்கும்
விடுதலையாம்-
மீட்டுவிட்டார்களாம் -
உளறின செய்திகள் நேற்று
நாய்கள் குரைத்தன
நரிகள் ஊளையிட்டன
வல்லூறுகளும்
ஆந்தைகளும்
சென்று குடியேற -
தயாராய் இப்போ இருக்கிறது
”மீட்டெடுத்த மண்”
விடுதலையாம்!
எம் மண்ணுக்கு-
செய்திகள் உளறின நேற்று
Subscribe to:
Posts (Atom)
















