1 – அனேகமாக பேய் பெண்ணாக இருக்கும் ஆனால் அடித்தால் பேயடியாக இருக்கும். மலையாள மாந்திரிகர்களை தவிர யாருக்கும் கட்டுப்படாது. பேய் கடவுள் சிலையை கண்டால் நடுங்கும். இந்த பேய் விரட்டும் மாந்திரீகர்கள் எப்பவும் பேயைவிட பயங்கரத் தேற்றமாக இருப்பினம்.


2 –துப்பாக்கி குண்டுகள் ஆட்களை பார்த்துத் தான் தாக்கும். கதாநாயகர்களை ஒன்றுமே செய்வதில்லை. மற்றவையை ஐம்பதடி தூரத்தில் நின்று சுட்டாலே உயிரை குடிக்கும்.

3 – இளம் பெண்கள் எப்பவும் ஒன்றில் சரியான கோபக்காரியாகவோ அல்லது வெகுளியாகவே ( லூசு ) இருப்பினம். அனேகமான தமிழ் பெண்கள் கவர்ச்சியாகவே உடுப்பு போடுவினம்.

4- அரசியல்வாதிகள் எப்பவும் வேட்டி கட்டியிருப்பினம். அனேகமான அரசியல்வாதிள் குண்டாக இருப்பினம். காசெ’ண்டால் கொலையும் செய்வினம் அவை.


5 – கோவில் போகும் பெண்கள் சேலை மட்டுமே அணிவார்கள். கட்டாயம் கையில் அர்ச்சனை தட்டு எடுத்துச் செல்வர்

6 – ஒரு ஆண் ஒரு பெண்ணின் எந்த பாகத்தை தொட்டாலும் பெண் கனவு காண்பது வழக்கம். கனவில் எந்த சாரிகள் ஆபரணங்கள் அணிந்திருந்தேன் என்று ஞாபகம் வைத்து பிறகு மற்றவைக்கு சொல்வது அவர்கள் வழக்கம். கனவில் மட்டும் அவர்களை எங்கே தொட்டாலும் அவர்களுக்கு பிரச்சனையில்லை.

7- நீதிபதிகள் எப்பவும் பயந்தவர்கள். வக்கீகள் காசுப் பேய்கள்.

8. அனேகமான ஆண்கள் சரியான அடிதடி காரர். ஆ ஊ எண்டேலே கையை நீட்டி விடுவினம். அனேகமான அடியாட்கள் சோம்பேறிகள், பயந்தவர்கள்.

9. பணக்கார்ர் எல்லோரும் எமாற்றுக்காரர்கள். அனோகமான பணக்காரரின் பணம் கருப்பு.

10 அனேகமான ரோட்டில் ஸ்பீட் லிமிட் இல்லை. எவ்வளவு தூரம் ஓடினாலும் காருக்கு பெற்றோல் மட்டும் முடியாது

11  அரிவாட்களை வீடுகள், வியாபாரத் தலங்களிலும்  செருகிவைப்பது தமிழர்கள் வழக்கம்.

12. என்ன பிரச்சனை என்றாலும் யாரும் சொல்லாமலே காவல் துறை வந்துவிடும். ஆனால் பிரச்சனை முடிந்தபின்னர் தான் எப்பவுமே வருவார்கள். காவல் துறை யாரையும் எப்போதும் என்னவும் செய்யல்லாம்.

13. எல்லா ஊர் எல்லையிலும் தவறாமல் ஒரு ஐயநார் கோவில் இருக்கும். அங்கு ஈசியாக புடுஙக்க் கூடியதாக சூலங்கள் நட்டிருப்பினம் (இது கொஞ்சம் பழசோ?)

14. வடிவான பெண்களுக்கு எப்பவும் ஒரு வடிவில்லாத அல்லது ஒரு வெகுளிப் பெண் நண்பியாக இருப்பா. அந்த நண்பி எப்பவும் ஒரு வடிவிலாத அல்லது ஒரு வெகுளிப் பையனை மணப்பது வழக்கம்.

15. சில பல்கலைக் கழகங்களிலும் காலேஜ்களிலும் எவ்வளவு அரியர்ஸ் வைச்சாலும் வீட்டை அனுப்ப மாட்டினம். காலேஜ்களில் வயதெல்லை இல்லை.


16. கடத்தல் கார டான்கள் எத்தனை கொலையும் செய்யல்லாம். அது தெரிய வராது. கடைசியில் ஒரு ஈ, காக்காவை அடிக்கும் போது மாட்டுவினம்.

17.  அனேகமான பார்களில் பெண்களின் நடனம் சர்வ சாதாரணம். யாரும் எப்போதும் சும்மாவே போய்வரலாம்.

18 நல்ல பாடல்கள் பின்ணணியில் போனால் பிள்ளைகள் அதி விரைவாக வளருவினம், ஆண்டி அரசனாகலாம். குக்கிராமம் நகரம் ஆகலாம்.



19. ஒத்த இரட்டையர்கள்  எப்பவும் வேறு வேறு தோற்றத்தில் இருப்பர். எப்பவும் ஒருவர் நல்லவராகவும் ஒருவர் கெட்டவராகவும் இருப்பது வளமை.



ஆமா உங்களுக்கும் இதுபோல கனக்கத் தேன்றுமே? பின்னூட்டத்தில் எழுதிவிடுங்கோ!!

கதைகள் சொல்லும் இந்த படங்களைப் பாருங்கள்!

பிடிச்சுக்கடா, நான் காப்பாற்றுவேன் உன்னை!

நீயா நானா? சரியான போட்டி

பெற்றால் தான் பிள்ளையா?

என்னடா செல்லம் உன் பிரச்சனை?

அம்மாவே தெய்வம்.....


நட்பு எதுவென்று மனிதருக்கு பாடம் கற்பிப்போம் வா!

தலையின் பாதை நம் பாதை!

பிடிச்சிருக்கா? இல்லையா சொல்லுங்க!!


இளைய தளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி இன்னும் சில தினங்களில் வெளிவர இருப்பது அறிந்தததே.  இயக்குனர் A.R. முருகதாஸ் தயாரிக்கும் இப் படத்தில்   விஜய்க்கு ஜோடியாக கஜோல் அகர்வால் நடிக்க  சரத்குமார், ஜெயராம், சத்யன், வித்யுத் ஜாம்வால் ஆகியோரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிப்பதிவை சந்தோஷ் சிவன் செய்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ்  இசையில் ஆறு பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கும் வெளிவிடப்பட்டிருக்கின்றன. (பாடல்கள் கீழே)

 நண்பன் பட வெற்றிக்குப் பிறகு வரும் படம் எனபதாலும் முருகதாஸின் இயக்கம் என்பதாலும்  விஜய் ரசிகர்கள் மட்டும் அல்லாது எல்லோரிடமும் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. பாடகி ஆந்திரியாவுடன் இணைந்து விஜய் ஒரு பாட்டையும் பாடி இருக்கிறார்.

மும்பாய் பின்னணியில் அமைந்த இப் படத்தில் விஜய் இரண்டாம் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த துப்பாக்கி வெடிக்குமா வெடிக்காதா என்று இன்னும் சில் நாட்களில் தெரிந்துவிடும். we are waiting!


படங்கள் உங்கள் பார்வைக்கு:

இந்தப்படத்தில் பஞ் வசனங்கள் இல்லை என்று முருகதாஸ் சொல்லியிருந்தார். ஆனாலும் நான் நாலைந்து எழுதியிருக்கிறேன். நல்லா இருந்தா கருத்த எழுதுங்கண்ணா!



த(ல)லைக்கு சுட்டா அது சூடு. துப்பாக்கிக்கே சுட்டா?


இந்த துப்பாகிக்கு இரண்டு முகம்டி. இப்ப நீ பாக்கிறது இரண்டாவது முகம்!!


பொலிஸ் வேசம் போட்டா சுட்டுத் தனே ஆகணும்?....அட நீ ஆடு


மற்றவங்க துப்பாக்கி சுட்டா அது வெடிக்கும். துப்பாக்கியே துப்பாக்கியை சுட்டா?


நீ அழகோ இலலையோ, நான் அழகிய தமிழ் மகன் என்று தமிழ் நாடே சொல்லுது!!



இந்த திரைப்பட முன்னோட்டதை பாருங்க



பாடல்கள்

பாட்டுகள் இன்னும் கேட்கவில்லை என்றால் கேளுங்க அல்லது தரவிறக்கம் செய்யலாம் (பாடல்கள் - நன்றி தமிழ் வயர் தளம்)

Kutti Puli Koottam (Hariharan, Tippu, Narayana, Satyan, Ranina Reddy)
Antarctica (Vijay Prakash, Krish, Rajeev, Devan)
Poi Varavaa (Karthik, Chinmayee)
Google Google (Vijay, Andrea Jeremiah, Joe, Krishna Iyer)
Vennilave (Hariharan, Bombay Jayashri)
Alaikaa Laikaa (Javed Ali, Sayanora Philip, Sharmila)
Alaikish On Mission (Theme)

உங்கட கருத்துகளை பின்னூட்டத்தில் எழுதலாமே?